இன்று தமிழக வரும் சசிகலாவை வரவேற்க அவரது தொண்டர்கள் மிகவும் ஆவலுடன் உள்ள நிலையில், பல இடங்களில் இவருக்கு பேனர்கள் அடிக்கப்பட்டு, இவரை வரவேற்க தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா அவர்கள் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், இன்று சென்னை திரும்புகிறார். இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார். இது அதிமுகவினர் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று தமிழக வரும் சசிகலாவை வரவேற்க அவரது தொண்டர்கள் மிகவும் ஆவலுடன் உள்ள நிலையில், பல இடங்களில் இவருக்கு பேனர்கள் அடிக்கப்பட்டு, இவரை வரவேற்க தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சசிகலா பேரணியாக செல்ல உள்ள இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…