Sasikala [File image]
தென்காசி; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியை அப்போது வழிநடத்தியவர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக இருந்த சசிகலா. அவர் தலைமையில் தான் ஓ.பன்னீர்செல்வம் முதலைவரானார். பின்னர், ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். அந்த சமயம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை சென்றார் சசிகலா.
சிறையில் இருந்து 4 ஆண்டுகள் கழித்து 2021இல் வெளியில் வந்த சசிகலா, அதிமுக கட்சி நலனை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். ஆனால் அதன் பிறகு 2021 தேர்தலில் அதிமுக தோல்வியை அடுத்து 2022இல் திருவள்ளூரில் மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் சசிகலா.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது, சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது என அடுத்த திருப்பங்கள் அதிமுகவில் நிகழ்ந்தது.
நடந்து முடிந்த 2024 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. மேலும் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்து அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளகியது. இந்த தேர்தல் முடிவுகளை அடுத்து தனது அரசியல் ரீ என்ட்ரியை சசிகலா மீண்டும் அறிவித்தார். மேலும் அம்மா வழியில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, இன்று முதல் 4 நாட்கள் தென்காசிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் சசிகலா. அதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். இன்று முதல் தென்காசியில், பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து ஒருங்கிணைக்க சசிகலா முடிவு செய்துள்ளார். அதற்கடுத்த பயணம் பற்றிய விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…