“சசிகலா வரட்டும்.. அப்பறம் பார்க்கலாம்!”- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Default Image

சசிகலா வரட்டும் அப்பறம் பார்க்கலாம் என நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார்.

அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் புதிய கல்விக்கொள்கை குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு அவர், “முதல்வர் பழனிச்சாமி கல்விக்கொள்கை குறித்து ஆராய இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாகவும், அவர்களின் பரிந்துரையின்படி இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா விடுதலை குறித்த கேள்விக்கு அவர், “சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்