சிறையில் இருந்த சசிகாலா வெளியே சென்றது உண்மைதான்! விசாரணை குழு பரபரப்பு அறிக்கை!

Default Image

சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெங்களூரு நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதனால் பெங்களூரு அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, கருணாகரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்த சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்வது போல வீடியோ ஒன்று வெளியானது. மேலும் சிறை துறை அதிகாரி ரூபா இது குறித்து புகார் கூறினார். மேலும், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அதில் ஒரு அறையில் சசிகலாவிற்க்காக உணவு தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, கர்நாடக அரசு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வினய் குமார் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை குழு தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், சசிகலா சிறையில் இருக்கும்போது வெளியே போனது உண்மைதான் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban