தொண்டர்களுக்கு வீடியோ காட்சி மூலம் வேண்டுகோள் விடுத்த சசிகலா!!

Default Image

ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதே தொண்டர்கள் எனக்கு தரும் பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று வி.கே.சசிகலா வேண்டுகோள்.

ஆகஸ்ட் 18-ஆம் தேதி நாளைய தினம் வி.கே.சசிகலாவின் 67ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சசிகலா வீடியோ காட்சி மூலம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சசிகலா, என்னை வந்து நேரில் சந்திப்பதற்கு கடிதங்கள் வாயிலாகவும், அலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பதாலும், பொது முடக்கம் நீடித்து கொண்டியிருப்பதாலும், எனது அருமை தொண்டர்கள் பாதுகாப்பையும், உடல்நலத்தையும், கருத்தில் கொண்டு அவரவர் வசிக்கும் இடங்களிலேயே ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்தும், நாட்டு மக்கள் நலம் பெற வேண்டுதல் செய்வதும் நீங்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்து பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், அதனை உற்சாகமாக கொண்டாட தொண்டர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அன்றைய தினம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தி அரசியல் பயணத்தை அவர் தொடங்குவார் என்றும் கூறப்பட்டது.

ஜெயலலிதா உடன் போயஸ்கார்டனில் இருந்த வரைக்கும் பெரிய அளவில் பிறந்தநாளை சசிகலா கொண்டாடியதில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு சசிகலா சிறை சென்ற பின்னர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ட்விட்டரில் #HBDChinnama என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை கொண்டாடினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்