சர்கார் விவகாரம் : ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை…!

Published by
Venu

சர்கார் பட விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு 6 வாரம் வரை தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றபிரிவு வழக்குகள் போடப்பட்டன.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவு குற்றப்பிரிவு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
Image result for sarkar ar murugadoss

இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்துள்ள நிலையில், விரோதத்தை தூண்டியதாக எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை, திரைப்படத்தை, திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல் பிற்பகலில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின்னர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.சர்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.அதேபோல்  ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர் தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

29 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

42 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

58 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

1 hour ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago