கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜீவஜோதி என்பவர் சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஆவார்.ஜீவஜோதியின் கணவர் பெயரை பிரின்ஸ் சாந்தகுமார் ஆகும். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில்வேலையாளாக பணியாற்றி வந்தார்.
ஆனால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் நல்ல பலன்களை அடையலாம் என்று ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறினார்கள். ஏற்கெனவே ராஜகோபாலுக்கு 2 மனைவிகள். இருந்தாலும் ராஜகோபால் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
எனவே ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கடத்தப்பட்டார்.இதனால் ஜீவஜோதி கணவரை காணவில்லை என்றும் ராஜகோபாலின் ஆட்கள் அவரை கடத்திவிட்டதாகவும் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகார் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணையை தொடங்கினார்கள்.பின்னர் சில நாட்களில் பிரின்ஸ் சாந்தகுமாரின்(ஜீவஜோதியின் கணவர்) உடல் கொடைக்கானலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ,அவரது மேலாளர் டேனியல் உட்பட 9 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.மீதமுள்ள 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதேபோல் தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராஜகோபால்.ஆனால் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றமும் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.பின் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அதில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.மேலும் ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு கெடு விதித்தது.
ஆனால் ராஜகோபால் தரப்பில் உடல் நிலையை காரணம் காட்டி சரணடைவதிலிருந்து விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.பின் சரணடைவதிலிருந்து விலக்குக் கோரிய ராஜகோபாலின் மனு நிராகரித்தது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…