நம்பவச்சி ஏமாத்திட்டாங்க.. தூக்குல போடுங்க… கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி கண்ணீருடன் பேட்டி.!

Default Image

எங்களை நம்பவச்சி ஏமாத்திடாங்க.. இவங்க எல்லாரையும் தூக்குல போடுங்க என கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா பேட்டியளித்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்பவரை, அவரது மனைவி சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட சிலர் கே.ஆர்.பி அணை அருகே நடு ரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.

நீதிமன்றத்தில் சரண் :

காதல் திருமணத்தை எதிர்த்து நடு ரோட்டில் நடந்த இந்த ஆணவ கொலை சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த விவகாரம் சட்டமன்றம் வரை விவாத பொருளானது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட 3 பேர் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் சரண் அடைந்துவிட்டனர்.

கண்ணீர்மல்க பேட்டி :

இந்நிலையில் தன் கணவர் இறப்பு குறித்து மனைவி சரண்யா கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களை நம்பவச்சி ஏமாத்திட்டாங்க.. என்றும், எனக்கு அப்பாவாக, அம்மாவாக உடன் இருந்து பார்த்து கொண்டவர் எனது கணவர் என அழுதுகொண்டே கூறினார்.

மேலும், எனது கணவர் கொலைக்கு காரணமானவர்களை தூக்கிவிட வேண்டும் என கண்ணீர் மல்க கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா சேத்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்