ஆதியோகி சிவன் சிலை முன்பு 7 உபாசகர்களால் நடத்தப்பட்ட ‘சப்தரிஷி ஆரத்தி’..!

Published by
Edison

கோவை:அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்,ஈசாவில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு சிலைக்கு,சக்தியளிக்கும் விதமாக,யோகேஸ்வர லிங்கத்தை,சப்தரிஷிகளின் உருவங்களுடன் சத்குரு பிரதிஷ்டை செய்து உள்ளார்.இதனையடுத்து,வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சப்தரிஷி ஆரத்தியானது,அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .

இந்நிலையில்,அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (டிச 23) ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர்.இதற்காக,அவர்கள் 7 பேரும் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து ஈஷாவிற்கு வருகை தந்தனர்.

அதன்படி,சப்தரிஷி ஆரத்தியின்போது யோகேஷ்வர லிங்கத்தை 7 உபாசகர்களும் சுற்றியமர்ந்து சந்தனம்,வில்வம்,புனித நீர்,மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து,பின்னர் மந்திரங்கள் கூறி சப்தரிஷி ஆரத்தி நடத்தினர்.மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 8 மணி வரை நிகழ்ந்த இந்த செயல்முறை சக்தி நிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த தருணத்தில் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

 

இந்த சப்தரிஷி ஆரத்தியானது சிவன் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறையாகும்.

சப்தரிஷி ஆரத்தியின் முக்கியத்துவம் என்பது,அகஸ்தியர் உள்ளிட்ட சப்தரிஷிகள்,யோக விஞ்ஞானத்தை பரப்ப உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றதகவும்,செல்வதற்கு முன், ‘சிவனை இனி நேரடியாக காண முடியாதே’ என்ற ஏக்கத்தை அவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதனால்,சிவன் இந்த சப்தரிஷி ஆரத்தி என்னும் செயல்முறையை வழங்கி,அதன் மூலம் தன் இருப்பையும்,அருளையும்  உணர்த்துவதற்கு வழிவகுத்தார் என்று நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

4 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

4 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

5 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

6 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

8 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

9 hours ago