#BreakingNews : மணல் கடத்தல் விவகாரம் ! ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

Published by
Venu

மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அவரது மனுவில்,வைகை நதிக்கரை பகுதியில் அமைந்துள்ள இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது.விவசாய பகுதிகளில் அரசின் அனுமதியை மீறி சவுடு மணல் எடுப்பதாக தெரிவித்தார்.மேலும் விவசாய நிலங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது .அப்பொழுது உயர்நீதிமன்ற மதுரை கிளை,மணல் கடத்தல் விவகாரத்தில் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்துள்ளது.நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் தினமும் 10 வழக்குகள் மணல் எடுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் சவுடு மண் எடுப்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சிவகங்கை ஆட்சியர் விரிவான பதில் அளிக்க கோரி செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். 

Published by
Venu

Recent Posts

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

49 minutes ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

1 hour ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

2 hours ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

2 hours ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

3 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

4 hours ago