சனாதான கொள்கைகள் மிக முக்கியமானது.! மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு.!

Published by
மணிகண்டன்

உலக அளவிலான ஒருமைப்பாட்டில் நமது சனாதன கொள்கைகள் மிக முக்கியமானது எனவும், நம்மிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும் நாம் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். – ஆளுநர் ரவி பேச்சு. 

ஒரே பாரதம் உன்னத பாரதம் – யுவ சங்கமம் எனும் பெயரில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரிபுரா மாநில NIT (தேசிய தொழில்நுட்ப கல்லூரி) மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் : அப்போது பேசுகையில், 2047ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் மத்தியில் இந்தியா உன்னத நிலையை எட்டுவதற்கு, இந்தியாவின் எழுச்சிக்காகவும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உறுதியான கோட்பாடு மிக முக்கியமான ஒன்றாகும்.
நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், நாட்டுப்புற கலைகள் மற்றும் கதைகள் அனைத்துமே நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

சனாதன கொள்கைகள் : உலக அளவிலான ஒருமைப்பாட்டில் நமது சனாதன கொள்கைகள் மிக முக்கியமானது எனவும், நம்மிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும் நாம் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். அந்த ஒற்றுமையால் தான், கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம். ஒன்றுபட்டு கிடந்த நமது ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் நமது கலாசார-நாகரிக துண்டிப்பு தான் எனவும் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி : மேலும், நமது மாநிலங்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. ஆனாலும் பாரதம் எனும் ஆன்மா அனைத்து மாநிலங்களையும் ஒருமுகப்படுத்தி உள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களையும், தாய் மண்ணையும் இரு கண்களாகவே பார்க்கிறார். நம் நாட்டை பற்றி உலக நாடுகளின் பார்வை தற்போது வெகுவாக மாறிவிட்டது. என்றும், மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது தேசம் வளரும். இந்த தேசத்தை தகுதியான இடத்திற்கு கொண்டு செல்லும் கடமை மக்களுக்கு இருக்கிறது. என்றும் அந்த விழாவில் ஆளுநர் ரவி பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago