காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடி…! சாமியாரை அடித்து உதைத்த பொதுமக்கள்..!

Default Image

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடியை, அடித்து உதைத்த பொதுமக்கள்.

திருச்சி, அல்லித்துறை அருகே சவேரியார்புரத்தை சேர்ந்த ஜூலியஸ் சாந்தகுமார், இரவில் சுடுகாட்டில் தங்கி நிர்வாணமாக மாந்திரீக பூஜைகளில் ஈடுபட்டு  வந்துள்ளார்.அடிக்கடி  ஜூலியஸ் சாந்தகுமாருடன், ஊர் மக்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, சுண்ணாம்புக்காரன்பட்டியில் தனது இரு வாகனத்தை தீ வைத்து எரித்த ஜூலியஸ், வழியில் சென்றவர்களிடம் தகராறில்  ஈடுபட்டுள்ளார். பின் தன்னை தானே கத்தியால் கீறிக்கொண்டதை பார்த்த பொதுமக்கள், சோமரசன் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, ஜூலியஸை பிடித்த எஸ்.ஐ-யை கத்தியால், கை மற்றும் பிற உறுப்புகளில்  குத்தியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், சாமியாடியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் சாமியார் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்