பறக்கும் ட்ரோன் கேமிரா மூலம் ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை விரட்டியடித்த விடியோவை சேலம் காவல்துறையினர் வெளியிட்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது சேலம் நகர இளைஞர்கள் மலையடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடினர். அதனை பறக்கும் ட்ரோன் ரக கேமிரா மூலம் போலீசார் கண்டறிந்து, அந்த பறக்கும் கேமிரா கொண்டே அந்த இளைஞர்களை போலீசார் கதறவிடுகின்றனர்.
கேமிரா கண்டவுடன் இளைஞர்கள் தெறித்து ஓடுகின்றனர். ஒரு இளைஞர் தனது லுங்கியால் உடல் முழுக்க மறைந்து இருக்கிறார். கேமிரா தன் அருகில் வருவதை கண்டவுடன் துள்ளியடித்து ஓட்டம் பிடிக்கிறார்.
இன்னொரு இளைஞர் சிறிய மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள, அந்த இளைஞரின் முன்னால் கேமிரா பதிவு செய்கிறது. உடனே ஒரு பூச்சியை விரட்டுவது போல தனது பேட்டால் விரட்ட முயற்சித்து பின்னர் அங்கிருந்து பதறி ஓடுகிறார்.
இதேபோல மற்றவர்களும் தெரித்து ஓட கொஞ்ச நேரத்தில் அந்த இடம் காலியாகி விடுகிறது. இதனை கொஞ்சம் காமெடி வசனங்கள் சேர்த்து எடிட் செய்து சேலம் காவல்துறையினர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த விடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் இதே பாணியில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொதுமக்களுக்கு நகைச்சுவையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…