பறக்கும் ட்ரோன் கேமிரா மூலம் ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை விரட்டியடித்த விடியோவை சேலம் காவல்துறையினர் வெளியிட்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது சேலம் நகர இளைஞர்கள் மலையடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடினர். அதனை பறக்கும் ட்ரோன் ரக கேமிரா மூலம் போலீசார் கண்டறிந்து, அந்த பறக்கும் கேமிரா கொண்டே அந்த இளைஞர்களை போலீசார் கதறவிடுகின்றனர்.
கேமிரா கண்டவுடன் இளைஞர்கள் தெறித்து ஓடுகின்றனர். ஒரு இளைஞர் தனது லுங்கியால் உடல் முழுக்க மறைந்து இருக்கிறார். கேமிரா தன் அருகில் வருவதை கண்டவுடன் துள்ளியடித்து ஓட்டம் பிடிக்கிறார்.
இன்னொரு இளைஞர் சிறிய மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள, அந்த இளைஞரின் முன்னால் கேமிரா பதிவு செய்கிறது. உடனே ஒரு பூச்சியை விரட்டுவது போல தனது பேட்டால் விரட்ட முயற்சித்து பின்னர் அங்கிருந்து பதறி ஓடுகிறார்.
இதேபோல மற்றவர்களும் தெரித்து ஓட கொஞ்ச நேரத்தில் அந்த இடம் காலியாகி விடுகிறது. இதனை கொஞ்சம் காமெடி வசனங்கள் சேர்த்து எடிட் செய்து சேலம் காவல்துறையினர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த விடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் இதே பாணியில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொதுமக்களுக்கு நகைச்சுவையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…