வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் !சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்கு

Default Image

வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  எஸ்.ஆர் பார்த்திபன் திமுக சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த நிலையில்  எஸ்.ஆர் பார்த்திபன்  மீது வனச்சரகர் அலுவலர் திருமுருகன் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், வேடன்கரடு என்ற மலைப்பகுதியில்  கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வனக்காவலர்களை மிரட்டியதாக எஸ்.ஆர் பார்த்திபன்,அவரது சகோதரர் அசோக்குமார்,காவலாளி பழனிசாமி,அனந்தபத்மநாபன்மீது  வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்