8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 109 மரங்களை வெட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது ? தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அரசு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
அதேபோல் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை(இன்று ) தாக்கல் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று மத்திய அரசு இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு பதிலை தாக்கல் செய்தது.அதில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது .அதேபோல் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…