வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியாக செய்திகள் பரவி வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் என்றும் ஜெ.தீபா ஆடியோ வெளியிட்டுள்ளார்.
போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாவது வதந்தி என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் அவர் கூறுகையில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம். அவர் மறைந்த பின்பு அந்த இல்லம் ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல்வேறு சட்டப் போராட்டங்களை தொடர்ந்து, தற்போது இந்த வீடு எங்கள் கையில் வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியான செய்திகள் பரவி வருகிறது.
இவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதலமைச்சர் பொறுப்பில் இருந்ததால், அவருக்கு உதவி செய்த பல பேர் தேவைப்பட்டனர். அவருடன் இருந்து உதவி செய்த காரணத்துக்காக அவருடைய சொத்துக்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல சட்ட போராட்டங்களுக்குப் பின்பு வேதா நிலையம் தங்கள் கைவசம் வந்துள்ளதால் அந்த வீட்டை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருவதோடு, கூடிய விரைவில் அந்த வேதா இல்லத்தில் குடியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…