அரசு நிர்வாகங்களில் சம்பள தேதி மாற்றம்..! ஊழியர்கள் கவலை..!

Published by
Edison

தமிழகத்தில்,அரசு போக்குவரத்துக்கு கழகங்களின் அதிகாரிகள் தாங்கள் விரும்பிய போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு, ஊழியர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும், மாநகர் போக்குவரத்து கழகம்,அரசு விரைவு போக்குவரத்து கழகம்,விழுப்புரம் போக்குவரத்து கழகம் போன்றவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.மாத கடைசி தேதியில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால்,கும்பகோணம்,மதுரை,சேலம்,நெல்லை மற்றும் கோவை போன்ற போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி தேதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வழங்கப்படும்.சம்பள தேதியானது விடுமுறை நாட்களில் வந்தால்,அதற்கு முந்தைய தேதியில் சம்பளம் வழங்கப்படும்.

இந்நிலையில்,அந்தந்த போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் தாங்கள் முடிவு செய்த நாட்களில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள்,”சம்பள தேதியை மாற்றினால் எங்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும்.ஆகையால்,பழைய முறையிலே சம்பளம் போட வேண்டும்” என்று  வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினர்..

இதற்கு முன்னதாக சம்பள உயர்வு, தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்டமாக போராட்டங்களை தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்னெடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Edison

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago