கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் சூரமங்கலம் உழவர் சந்தை மற்றும் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகிய இரண்டு சந்தைகளும் இயங்கும்.
இனி முனியப்பன் கோயில் வளாகத்தில் அஸ்தம்பட்டி உழவர் சந்தை இயங்கும்.இனி காமராஜர் காலனி 1-வது தெருவில் அம்மாபேட்டை உழவர் சந்தை இயங்கும். இனி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தாதகாப்பட்டி உழவர் சந்தை இயங்கும்.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் எடப்பாடி உழவர் சந்தை இயங்கும். இளம்பிள்ளை வாரச்சந்தை பகுதியில் இளம்பிள்ளை உழவர் சந்தை இயங்கும். ஆத்தூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆத்தூர் உழவர் சந்தை இயங்கும்.அறிவிக்கப்பட்ட புதிய இடங்களில் வருகின்ற சனிக்கிழமை முதல் உழவர் சந்தைகள், இதர காய்கறி சந்தைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…