முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்..!

Published by
Edison

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா பேரிடரை தமிழகம் எதிர்கொள்ளவதற்கு தங்களால் முடிந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து,முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஏழை மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியுள்ளது.

மேலும்,இதுகுறித்து சக்தி மசாலா நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர்கள் பி.சி.துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி,ஆகியோர் தெரிவித்துள்ள அறிக்கையில்,”ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையிலும் சக்தி மசாலா பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது.அதைப் போலவே,இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் கொரோனா நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும்,தமிழகத்தில் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள அனைவரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி,சக்தி மசாலா நிறுவனம் சார்பில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு மே 15 ஆம் தேதியன்று வங்கி மூலமாக ரூ.5 கோடி அனுப்பப்பட்டுள்ளது.இதைப் பெற்றுக் கொண்ட முதல்வரும் எங்கள் நிறுவனத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,வருவாய்துறை,சுகாதாரத்துறை, காவல் துறை, தொழிலாளர் துறை, உணவு வழங்கல் துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, செவிலியர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், மருத்துவர்கள், தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு ,பகல் பாராமல் பணிபுரிந்து வருவதற்கு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் வணக்கத்தையும் நன்றியையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,கொரோனா வைரஸானது கூடிய விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு,பொதுமக்கள் அனைவரும் நலமுடன் வாழ சக்தி மசாலா நிறுவனம் இறைவனிடம் வேண்டுகிறது” என்று கூறினர்.

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

2 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

3 hours ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

3 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

3 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

4 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

4 hours ago