முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்..!

Published by
Edison

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா பேரிடரை தமிழகம் எதிர்கொள்ளவதற்கு தங்களால் முடிந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து,முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஏழை மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியுள்ளது.

மேலும்,இதுகுறித்து சக்தி மசாலா நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர்கள் பி.சி.துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி,ஆகியோர் தெரிவித்துள்ள அறிக்கையில்,”ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையிலும் சக்தி மசாலா பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது.அதைப் போலவே,இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் கொரோனா நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும்,தமிழகத்தில் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள அனைவரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி,சக்தி மசாலா நிறுவனம் சார்பில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு மே 15 ஆம் தேதியன்று வங்கி மூலமாக ரூ.5 கோடி அனுப்பப்பட்டுள்ளது.இதைப் பெற்றுக் கொண்ட முதல்வரும் எங்கள் நிறுவனத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,வருவாய்துறை,சுகாதாரத்துறை, காவல் துறை, தொழிலாளர் துறை, உணவு வழங்கல் துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, செவிலியர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், மருத்துவர்கள், தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு ,பகல் பாராமல் பணிபுரிந்து வருவதற்கு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் வணக்கத்தையும் நன்றியையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்,கொரோனா வைரஸானது கூடிய விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு,பொதுமக்கள் அனைவரும் நலமுடன் வாழ சக்தி மசாலா நிறுவனம் இறைவனிடம் வேண்டுகிறது” என்று கூறினர்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago