எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி விருது

சபரிநாதன் என்பவர் எழுத்தாளர். இவர் சென்னையில் உள்ள அரசு வேலைவாய்ப்பகத்தில் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருபவர். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருபவர்.இவர் 2011-ஆம் ஆண்டில் களம் காலம் ஆட்டம் மற்றும் 2016 ஆம் ஆண்டு வால் என்ற கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சாகித்ய அகாடமி வழங்கும் யுவ புரஸ்கார் விருது ‘வால்’ என்ற கவிதை தொகுப்புக்காக சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாதமியின் பால் புரஸ்கார் விருது தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது.