மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை.! கைதான சகாயராணி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம நபரக்ள்.!

Published by
மணிகண்டன்

பள்ளி மாணவன் விஷம் கொடுத்த கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக மாணவியின் தாய் சகாயராணி வீட்டை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர். 

சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுத்துவிட கூடாது என்பதற்காக மாணயின் தாய், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த அந்த சம்பவம் தான்.

புதுசேரி, காரைக்காலில் தனியார் பள்ளியில் படிக்கும் பாலமணிகண்டன் எனும் மாணவனை தான் , அவனுடன் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, பள்ளி காவலாளியிடம், தான் பால மணிகண்டன் உறவினர் என கூறி விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து இதனை பால மணிகண்டனிடம் கொடுக்க சொல்லி கொடுத்தனுப்பியுள்ளார்.

இதனை பள்ளி காவலாளி பாலமணிகண்டனுக்கு கொடுத்து, அவர் வாந்தி மயக்கம் எடுத்து, பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த விவகாரத்தில் சிசிடிவி வீடியோ வைத்து சகாயராணியை கைது செய்தது போலீசார். விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது புதுசேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சகாயராணி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் சகாயராணி வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். அந்த வீடு எதோ போர்க்களம் கண்டது போல இருக்கிறது.

இதற்கிடையில், சரியான சிகிச்சை கொடுக்காததால் தான் மாணவர் உயிரிழந்தார் என புகார் எழுந்ததை தொடர்ந்து மருத்துவ குழு அமைத்து அரசு மருத்துவமனையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago