இந்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த.. இன்றே கடைசி நாள்.!

Default Image

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

இதனால்,  இந்த நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மின் கட்டணம் செலுத்த மாற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இந்த மாவட்டங்களுக்கு அதிக கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி,  ஜூலை 15-ஆம் தேதி அதாவது இன்றுடன் கால அவகாசம் முடிகிறது. இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால், இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இன்றுடன் கடைசி நாள் என்பதால் கூட்டத்தை தவிர்க்க இணையதள பரிவா்த்தனை மூலம் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மின் கட்டணம்  செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அபராதத் தொகையோ அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்படவோ வாய்ப்பு  உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்