#நள்ளிரவு 3மணி வரை #விடிய விடிய முத்துராஜிடம் விசாரணை??!

Default Image

சாத்தன் குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலிசாரிடம் இருந்து சிபிஐயை வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் இறங்கிய சிபிஐ போலீசார் இரு பிரிவுகளாக விசாரணையை முடிக்கிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஏற்கனவே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

அதன்படி வழக்கு தொடர்பாக உண்மையை அறிய தங்களது பாணியில் சிபிஐ வியூகம் வகுத்துள்ளதாகவும் அதன் முதல்கட்டமாக காவலர்  முத்துராஜிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மற்றவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவலர் முத்துராஜிடம் நள்ளிரவு 3 மணி வரை  விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியதாகவும்; காலை முதல் மற்ற 4 பேரிடம் விசாரணை  நடத்த உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இவ்விசாரணையில்  சிபிஐ  காவலர் முத்துராஜை ஒரு அறையிலும், மற்றவர்களை வேறொரு அறையில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நேற்று முத்துராஜை சாத்தான்குளம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில் காவலர் முத்துராஜிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இன்று காலை முதல் கைதாகிய மற்ற 4 பேரிடம் விசாரணை  நடத்த திட்டமிட்டு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்