வதந்தி வீடியோ விவகாரத்தில் டெல்லி பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் கிளை மறுப்பு.
பொய்யான வதந்திகள்:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகளை சிலர் பரப்பியதால் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பொய்யான வதந்திகள் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு:
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கைது நடவடிக்கையில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
ஜாமீன் கோரி மனு:
அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமாண்ட்ரம், இந்த முன்ஜாமீன் மனுவை தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு பாஜக நிர்வாகியின் முன் ஜாமீன் மனு வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் வழங்க மறுப்பு:
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல் வீடியோ வெளியிட்ட பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.
நீதிபதி கண்டனம்:
தமிழ்நாட்டில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் வீடியோ சித்தரிப்பு செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, முன்ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…