உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு வதந்தியே காரணம் என கடைக்காரர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.40 ஆக குறைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினர். கேரளா பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா எதிரொலியால் கடும் வீச்சியடைந்துள்ளது. பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1 கிலோ ரூ.40, 2 கிலோ ரூ.70, 3 கிலோ ரூ.99 மற்றும் 100 கிராம் சில்லி சிக்கன் ரூ.15 மட்டுமே என்ற அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வருகிறோம். இதனால் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது என்று நாமக்கல் கோழிக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர். இதனிடையே கோழிகளுக்கு கொரோனா தொற்று என தவறான கருத்துகளை பரப்பிய 2 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டினர்.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…