இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்…!

Default Image

இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேலும், பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், 14 நாட்களுக்கு முன்பு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தயிருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மேலும், இன்று முதல், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு  ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்