ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான அனுமதியை திரும்ப பெற வேண்டும்.! உய்ரநீதிமன்றத்தில் திருமாவளவன் மனு.!   

Default Image

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என திருமாவளவன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

75வது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கார் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ், தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தனர்.

அதனை ஏற்று, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, பிரித்தாளும் கொள்கையை கொண்டது ஆர்.எஸ்.எஸ் கொள்கை.

ஆதலால், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வழங்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு  வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்