இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு பல கோரிக்கைகளை எழுந்தது.
இதனை அடுத்து, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…