மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாத ஊக்க தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டம்..! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!

Default Image

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில்  மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைக்கிறார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு பல கோரிக்கைகளை எழுந்தது.

இதனை அடுத்து, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai
annamalai ptr
gold price