அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.5 கோடி ரூபாய் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனந்தி என்பவர் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர். இவர் வயது 35. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு துறையான அச்சுத்துறை, எழுதுபொருள் துறை மற்றும் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிகளுக்காக 85 பேரிடம் ரூ.4 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளதாக ரேஷ்மா தாவூத், நந்தினி மற்றும் இவரது கணவன் அருண் சாய்ஜி ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இதில் கைதாகியுள்ள ரேஸ்மா தாவூத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில செயலாளராக பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
அதில் வேலை தேடும் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இதுவரை ரூ.5 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், போலி பணி நியமன ஆணை அச்சடித்து மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் போலி ஆவணங்களையும், அச்சு இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றினர். 3 நாள் காவலுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…