ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் ரூ.4,620 கோடி மோசடி வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நிர்வாகி கலைச்செல்விக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஹிஜாவு நிறுவனம் 15% வட்டி உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்களை கூறி சுமார் ரூ.4,620 கோடி முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹிஜாவு நிதி நிறுவனம் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
பொதுமக்களிடம் சுமார் ரூ.4,620 கோடி முதலீடுகளை பெற்று மோசடி செய்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்பட 15 பேர் தலைமைறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மீட்க வேண்டிய தொகை அதிகமாக உள்ளதாலும், 16,500 பேரிடமிருந்து புகார்கள், 40 பேர் மீது வழக்கு என கூறி ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயார்நீதிமன்றம்.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…