வருமான வரித்துறை மூலம்ரூ 44.57 கோடியும், பறக்கும் படை மூலம் ரூ 94.10 கோடியும் பறிமுதல்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Default Image

தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை மூலம்ரூ 44.57 கோடியும், பறக்கும் படை மூலம் ரூ 94.10 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தற்போது தமிழகத்தை பொருத்தவரை  ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது.அதன் மீதான பரிசீலனையும் நடைபெற்றது.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை  பறிமுதல் செய்து வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் பணிகள் குறித்து  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,   பணப்பட்டுவாடா குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.செலவின கண்காணிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் .

தமிழகத்தில் இதுவரை 520 கிலோ தங்கம், 421 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை மூலம்ரூ 44.57 கோடியும், பறக்கும் படை மூலம் ரூ 94.10 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்