ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.4,01,92,619 கோடி அபராதம் வசூல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,07,895 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,009 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  இதுவரை வெளிய சுற்றியவர்கள் மீது 3,85436 வழக்குகள் போடப்பட்டு, ரூ4,01,92,619 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு, பின்னர் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல் மற்றும் ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

18 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

38 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

52 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

3 hours ago