சென்னையில் கொரோனா தடுப்பிற்கு ரூ.400 கோடி செலவு -சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Default Image

சென்னையில் கொரோனா தடுப்பிற்கு  ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகரித்து வருகிறது.தற்போது  குறைந்து வருகிறது.நேற்று  ஒரே நாளில்  1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83,377  ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,376  ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், சென்னையில் கொரோனா தடுப்பிற்கு  ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது.பொருளாதாரம் மீண்டு வரவேண்டும், மக்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமானால் இயல்பு நிலை வரவேண்டும், மேலும் தளர்வுகளுக்கு தயாராகும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறோம். தளர்வுகளுக்கு தயார்  என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்