மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மாநிலங்களுக்கு முதல்கட்டமாக ரூ.8873 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டிற்கான அனைத்து மாநில அரசுகளுக்கு மாநில பேரிடர் நிதியாக ரூ.8,873 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியிடப்பட்ட தொகையில் 50 சதவிகிதம் வரை வரை அதாவது 4436.8 கோடி ரூபாய் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம்.
அவற்றில் மருத்துவமனைகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் , வெப்ப ஸ்கேனர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் , பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் சோதனை கருவிகள் மேம்படுத்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய நிதியை கொரோனா பணிகளுக்காக மத்திய அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…