மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மாநிலங்களுக்கு முதல்கட்டமாக ரூ.8873 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டிற்கான அனைத்து மாநில அரசுகளுக்கு மாநில பேரிடர் நிதியாக ரூ.8,873 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியிடப்பட்ட தொகையில் 50 சதவிகிதம் வரை வரை அதாவது 4436.8 கோடி ரூபாய் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம்.
அவற்றில் மருத்துவமனைகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் , வெப்ப ஸ்கேனர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் , பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் சோதனை கருவிகள் மேம்படுத்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய நிதியை கொரோனா பணிகளுக்காக மத்திய அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…