12 school students [File Image]
சென்னை : தமிழ் புதல்வன் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “புதுமைப் பெண் திட்டம்” போன்று மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான, பணிகளை தமிழக அரசு நேற்றைய தினம் தொடங்கியது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, கல்லூரி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் தோராயமாக சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
தற்பொழுது, இந்த திட்டத்தின்கீழ் மாணவர்கள் மாதம் ரூ.1000 பெறுவதற்கான தகுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும் / கிடைக்காது:
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…