பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5, டீசல் விலை ரூ 3 குறைக்கப்படும்” என அறிவித்தனர். சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பெட்ரோல் டீசல் மீதான வரியில் மத்திய அரசு அதிக பங்கை எடுத்துக் கொள்கிறது. அதனால், பெட்ரோல் டீசல், விலையை குறைக்க தற்போது சாத்தியமில்லை என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், நேற்று தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஏழை நடுத்தர மக்களின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ. 3 குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால், பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
எனினும், பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என தெரிவித்தார். இந்நிலையில், பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49 க்கு விற்கப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…