குடும்ப அட்டைகளுக்கும் நாளை முதல் ரூ.2000 வழங்கப்படும்-நாராயணசாமி அறிவிப்பு.!

Published by
murugan

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் 1071 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மக்களிடம் காணொளி மூலம் உரையேற்றும்போது 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும் என கூறினார்.

இதையெடுத்து தற்போது  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று  புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 4 மாதத்திற்கான செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.

சட்டப்பேரவை  வந்த அனைத்து எம்எல்ஏக்கள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.மேலும்  கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த  கொரோனா நிவாரண நிதி நாளைமுதல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் கணக்கிலும் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என இன்று  சட்டப்பேரவையில் நாராயணசாமி  கூறினார்.

 

Published by
murugan

Recent Posts

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!  

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…

5 hours ago

“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!

சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…

7 hours ago

பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…

9 hours ago

INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …

9 hours ago

மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…

9 hours ago

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

10 hours ago