கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் தொழில் முதலீட்டு கழகத்திடம் (TIIC) கடன் பெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2,000 சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதன தேவைகளுக்கான கடனுதவி வழங்கப்படும் என்றும் கொரோனா என்ற கோவிட் 19 நிவாரணம், மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.200 கோடி கடனுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் என்றும் சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்ற நிறுவனங்கள், கடன் தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…