உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணன்…!குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி..! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியைச் சேர்ந்த சரவணன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.2003-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பாண்டி மீனா என்ற மனைவியும், அருந்ததி ராய் என்ற 11 வயது மகளும் உள்ளனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் சரவணன் வீர மரணமடைந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .அதேபோல் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சரவணனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்