சென்னை:2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார்.
சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ரூ.150.89 கோடி உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,காணொலி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் இ-வாடகை ஆன்லைன் செயலியை தொடங்கி வைத்த முதல்வர்,வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
மேலும்,பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…