RS1000 Scheme: மகளிர் உரிமைத் தொகை திட்டம்.! செப்.11 அன்று முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை.!

Published by
செந்தில்குமார்

தமிழக அரசு கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி வரும் செப்டம்பர் 15 தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதன்படி, தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பப்படிவங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டது.

இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.5 கோடிக்கு மேற்பட்ட மக்கள்  விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதி உள்ள பயனாளிகளின் விண்ணப்பப்  பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் செப்டம்பர் 11ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் இந்த திட்டத்தின் சிறப்பு அதிகாரி உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!

சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…

4 minutes ago

“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

13 minutes ago

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

57 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago