கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Default Image

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிப்பு. 

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் அளித்து, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்