ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி.
மாநிலத்தின் நிதிநிலை பிரச்சனை சரியானதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு கூறினார். மேலும், அவர் கூறுகையில், குடும்ப தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். மாநிலத்தின் நிதிநிலையை சரிசெய்து கொண்டே இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம். ஆறுமுகசாமி ஆணியாயத்தில் இருப்பதை சட்டமன்றத்தில் வைப்போம், அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். ஓபிஎஸ் சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அப்போதைய முதல்வர் இபிஎஸ் அமைத்தார்.
இதுபோன்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டே என கூறியவர் இபிஎஸ். சட்டப்பேரவையில் தாக்கல் செய்து தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுப்போம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றசாட்டை கூறி வருகிறார். சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பதுதான் திமுகவின் திராவிட மாடல்.
மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். ஆட்சிக்கு வந்தவுடன் நான் இட்ட முதல் கையெழுத்து இலவச பயண கோப்பில் தான். உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது. இபிஎஸ் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…