யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் பழனிச்சாமி.!

Published by
murugan
  • திருவள்ளூரில் ஒரு பெண்ணை கடத்த முயன்றவரை யாகேஷ் என்ற இளைஞர் பிடிக்க முயற்சி செய்தபோது கடத்த முயன்றவர் ஆட்டோ வைத்து மோதினார். இதில் கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா்.
  • முதலமைச்சர் உயிர் இழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என அறிவித்து உள்ளார்.

திருவள்ளூரை அடுத்த உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன். இவரது மனைவி பத்மாவதி  இவர்களின் கடைசி மகன் யாகேஷ்.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தனியாா் நிறுவனத்தில்  டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி கொண்டஞ்சேரி கிராமத்தின் சாலையில் இரவு யாகேஷ் தனது நண்பா்கள் பிராங்க்ளின், பிரேம்குமாா், வினீத்குமாா் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது மப்பேடு சந்திப்பு சாலையில் நரசிங்கபுரம் செல்வதற்காக இளம் பெண் ஒருவா் ஆட்டோவில் ஏறினாா். ஆனால் அந்த ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி வழியாக கடம்பத்தூா் சென்றது.

இதனால் அந்த பெண் ஆட்டோவில் இருந்து கத்தி உள்ளார். அதைக் கேட்டுத் யாகேஷ் தனது நண்பர்களுடன் ஆட்டோவைத் துரத்தி உள்ளார். அப்போது எதிரே வாகனம் வர ஆட்டோ மெதுவாகச் சென்றபோது ஆட்டோவில் இருந்து அந்தப் பெண் குதித்து விட்டாா்.

பின்னர் அந்த பெண்ணை தனியாா் மருத்துவமனைக்கு தான் நண்பர்களை அழைத்து செல்ல கூறிவிட்டு யாகேஷ் மற்றும் பிராங்க்ளின் இருவரும்  இருசக்கர வாகனத்தில் அந்த ஆட்டோவைப்  துரத்தி சென்றனர். ஆட்டோவைக் கடந்து சென்று ஆட்டோவின் முன்னால் வாகனத்தை  நிறுத்த முயற்சி செய்தபோது ஆட்டோ டிரைவர் யாகேஷின் மீது ஆட்டோ கொண்டு  மோதினார்.

இதனால் யாகேஷ் படுகாயமடைந்தாா். ஆபத்தான நிலையில் யாகேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையெடுத்து கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா்.

இந்நிலையில் இன்று சட்டசபையில்  முதலமைச்சர் பழனிச்சாமி  உயிர் இழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி எனஅறிவித்து உள்ளார்.மேலும்  காயமடைந்த பிராங்க்ளினுக்கு ரூ .2 லட்சமும் , மற்ற 3 இளைஞர்களுக்கு ரூ .25,000 நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago