திருவள்ளூரை அடுத்த உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன். இவரது மனைவி பத்மாவதி இவர்களின் கடைசி மகன் யாகேஷ்.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தனியாா் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி கொண்டஞ்சேரி கிராமத்தின் சாலையில் இரவு யாகேஷ் தனது நண்பா்கள் பிராங்க்ளின், பிரேம்குமாா், வினீத்குமாா் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது மப்பேடு சந்திப்பு சாலையில் நரசிங்கபுரம் செல்வதற்காக இளம் பெண் ஒருவா் ஆட்டோவில் ஏறினாா். ஆனால் அந்த ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி வழியாக கடம்பத்தூா் சென்றது.
இதனால் அந்த பெண் ஆட்டோவில் இருந்து கத்தி உள்ளார். அதைக் கேட்டுத் யாகேஷ் தனது நண்பர்களுடன் ஆட்டோவைத் துரத்தி உள்ளார். அப்போது எதிரே வாகனம் வர ஆட்டோ மெதுவாகச் சென்றபோது ஆட்டோவில் இருந்து அந்தப் பெண் குதித்து விட்டாா்.
பின்னர் அந்த பெண்ணை தனியாா் மருத்துவமனைக்கு தான் நண்பர்களை அழைத்து செல்ல கூறிவிட்டு யாகேஷ் மற்றும் பிராங்க்ளின் இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த ஆட்டோவைப் துரத்தி சென்றனர். ஆட்டோவைக் கடந்து சென்று ஆட்டோவின் முன்னால் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தபோது ஆட்டோ டிரைவர் யாகேஷின் மீது ஆட்டோ கொண்டு மோதினார்.
இதனால் யாகேஷ் படுகாயமடைந்தாா். ஆபத்தான நிலையில் யாகேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையெடுத்து கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் முதலமைச்சர் பழனிச்சாமி உயிர் இழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி எனஅறிவித்து உள்ளார்.மேலும் காயமடைந்த பிராங்க்ளினுக்கு ரூ .2 லட்சமும் , மற்ற 3 இளைஞர்களுக்கு ரூ .25,000 நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…