அயனாவரத்தில் இருந்த கஞ்சா வியாபாரி ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஆய்வாளர் நடராஜன்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் இருந்தது. ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை போலீசார் பரிந்துரை செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, என்கவுண்டர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர் முபாரக் உள்ளிட்ட நான்கு காவலர்கள், மற்றும் ரவுடி சங்கர் உறவினர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…