ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பிரபல ரவுடி..!

Default Image

சேலம், அம்மாபேட்டை அருகே அதிகாரப்பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் மீது கொலை, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்றிரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை.
இந்நிலையில், அதிகாலையில் சரத்குமாரின் உடலில் காயங்களுடன் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாபேட்டை காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சரத்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது ரயில் மோதி இறந்தாரா என்ற கோணத்தில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்