அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்த வட்டாட்சியர்

Default Image

 கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களுக்கு தேவையான  அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தாலுகா அலுவலகத்தில் இறக்கப்பட்டது.

கோவை மாவட்ட வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு லாரியில் வந்து இறங்கிய ரேஷன் பொருட்களை வட்டாட்சியர் மகேஷ்குமார், ஊழியர்களுடன் சேர்ந்து நிவாரண மூட்டைகளை முதுகில் சுமந்து அலுவலத்திற்குள் கொண்டு சேர்த்தார். இதனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.இது தொடர்பான  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்