மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சமீப காலமாக மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்கும் போக்கை பார்க்கிறோம். ரோஜா, ரோஜா தான், அதுபோல் மத்திய அரசு மத்திய அரசு தான். ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும், அதன் வாசனையை மாற்ற முடியாது.
அதுபோன்று மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி எழுப்பிய கேள்விகளும், எங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன.
ரோஜா ரோஜாதான். ரோஜாவை யாராவது மல்லிகை என்பார்களா? என்று கேள்வி எழுப்பிய நிதியமைச்சர், கோவை சட்டப்பேரவை உறுப்பினராக சட்டப்பேரவைக்கு வந்துள்ளாரா? அல்லது ஓர் கட்சியின் பாதுகாவலராக வந்துள்ளாரா வானதி சீனிவாசன் என்று கேள்வி எப்பியுள்ளார்.
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…