பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய தளர்வுகளின்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவக்கூடும் என்பதால் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதர நாட்களில் காலை 7 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரை ரோப் கார் சேவைகள் இயக்கப்படும். அதன்பின் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் பிற்பகல் 2.30 மணி முதல் 7.30 மணிவரை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, www.tnhrce.gov.in என்ற வலைத்தளம் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்களுக்கு மட்டுமே ரோப் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…